Home பல்வேறு தெலுங்குக்குத் திருமுறை

தெலுங்குக்குத் திருமுறை

by admin
0 comment

ஓம்.
இறைவன் திருவருளால் இறைவான் முழுதும் பன்னிரு திருமுறைகள் மொழிபெயர்ப்பு நிகழட்டும்.பிறமொழி இலக்கியங்களும் தமிழுக்கு அணி சேர்க்கட்டும்.தண் கருணைப் பேராறு வல்லமை அருளட்டும்.அயராது உழைத்திடும் பெருமதிப்பிற்குரிய பெரியோரும் திரு சச்சிதானந்தம் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்கவென இறைவனை இறைஞ்சுகின்றேன்.தமிழ்நூல் வாழ்கவே.
அன்பன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

பன்னிரு திருமுறை –
தெலுங்கு மொழிபெயர்ப்பு
திருமலை – திருப்பதித் தேவஸ்தானம் நடத்திய
ஆலோசனைக் கூட்டம்
இடம்: திருமலை – திருப்பதித் தேவஸ்தானம் (திதிதே. TTD), கீழைத் திருப்பதி, பத்மாவதி விருந்தினர் இல்லத்திற்கு அருகில் உள்ள பணியாளர் பயிற்சி மையக் கருத்தரங்கு அறை.
நாள்: 16-2-2010 காலை 11 மணி
வருகை தந்தோர்:
1. முனைவர் கவிதா பிரசாதர், செயலாளர், தருமப் பிரச்சாரப் பரிசத்து, திதிதே.; Dr. R. Kavitha Prasad, Secretary, Dharma Prachara Parishad, TTD.
2. திரு. ச. இலட்சுமணய்யா, சிறப்பு அலுவலர், திதிதே.; Mr. S. Lakshmanaiah, Special Officer, TTD.
3. முனைவர் செஞ்சு சுப்பையா, பதிப்பாசிரியர், பாலபாரதி, நூல் தொடர், திதிதே.; Dr. P. Chenchu Subbiah, Editor, Bala Bharathi Series, TTD.
4. முனைவர் கே.க. சர்வோதன ராவ், ஓய்வு பெற்ற தெலுங்குப் பேராசிரியர்; Dr. K. Sarvothana Rao, Retd. Prof of Telugu.
5. திரு. பி. ஆர். ரங்கராஜன், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; Mr. P. R. Rangarajan, Retd. Prof of Tamil.
6. முனைவர் டி. சின்னி கிருஷ்ணய்யா, ஓய்வு பெற்ற தெலுங்குப் பேராசிரியர்; Dr. D. Chinni Krishnaiah, Retd. Prof of Telugu.
7. முனைவர் என். எஸ். ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற பதிப்பாசிரியர், திதிதே. Dr. N. S. Ramamoorthy, Retd. Editor, TTD.
8. திரு. சி. சைல குமார், முதன்மைப் பதிப்பாசிரியர், Mr. C. Shaila Kumar, Chief Editor, TTD.
9. முனைவர் சொக்கலிங்கம், தமிழ்ப் பதிப்பாசிரியர், திதிதே.
10. மறவன்புலவு க. சச்சிதானந்தன், சென்னை – காந்தளகம், தருமை ஆதீனத்தின் பன்னிரு திருமுறை மின்னம்பல தளச் www.thevaaram.org செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர்.
11. புலவர் க. ஆறுமுகம், தருமை ஆதீனப் புலவர், சென்னை.
12. திரு. வி. திவாகர், பன்னிரு திருமுறை – தெலுங்கு மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர், விசாகப்பட்டினம்.
13. திருமதி. சசிரேகா பாலசுப்பிரமணியம், சென்னை – காந்தளகம், பன்னிரு திருமுறை மின்னம்பலத் தள அமைப்பாளர்.
14. செல்வி நித்தியா கணேசன், சென்னை – காந்தளகம், பன்னிரு திருமுறை மின்னம்பலத் தள அமைப்பாளர்.
கூட்டக் குறிப்பு, புகைப் படங்கள், செயற்றிட்ட அறிக்கை யாவையும் இணைப்புகளில் பார்க்க.
செய்தியை ஊடகங்களோடும் நண்பர்களோடும் பகிர்க.
நன்றி


மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

You may also like

Leave a Comment