Home Video மண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்

மண்ணின் குரல் காணொளி: கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு
THFi Heritage Video Release Announcement
மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020:
கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள்

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.

கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள் – வீரராசேந்திரன் கால கல்வெட்டு:
கடற்றூர் என்பது உடுமலை அருகே தற்போதுள்ள கடத்தூர் ஆகும். இங்குள்ள கோயிற்பணிக்குத் தம்மை ஒப்புக்கொண்ட ஆடல் மகளிரில் ஒருவர் கோயிலுக்காகத் தூண் அமைக்க நன்கொடை அளித்துள்ளார். கொங்குச்சோழன் வீரராசேந்திரனின் பதினோராம் ஆட்சியாண்டில் கடற்றூரில் இருக்கும் தேவரடியாரான சொக்கன் வெம்பி என்பவர் கோயிலுக்குத் தூண் நன்கொடை அளித்திருக்கிறார் என்பது தூண் சொல்லும் கல்வெட்டுச் செய்தி என்று வரலாற்று தொல்லியல் விளக்கவுரை தருகிறார் திரு. துரை. சுந்தரம்.

யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க:
https://youtu.be/6sWyVim5Qpo
*கடத்தூர் கோவிலுக்குத் தேவரடியார் கொடையாக வழங்கிய கல்தூண்கள் *வீரராசேந்திரன் கால கல்வெட்டு

அன்புடன்
முனைவர். தேமொழி
[செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment