Home பல்வேறு செந்தமிழ்ச் செல்வன் – 1938ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சஞ்சிகை

செந்தமிழ்ச் செல்வன் – 1938ம் ஆண்டு தென்னாப்பிரிக்க சஞ்சிகை

by admin
0 comment
வணக்கம்.

எனது தமிழக பயணத்தின் போது கிடைத்த அரிய சேகரிப்புக்களில் தென்னாப்பிரிக்கா டர்பன் நகரிலிருந்து மாதம் இருமுறை என வெளிவந்த செந்தமிழ்ச் செல்வன் என்ற ஒரு சஞ்சிகையும் அடங்குகின்றது. ஒரே ஒரு நகல் எடுக்கப்பட்ட இந்தச் சஞ்சிகையை தமிழ் மரபு அறக்கட்டளை மின் சேகரத்திற்காக மாலன் அவர்கள் வழங்கினார்கள். 
இந்த சஞ்சிகையில் உள்ளூர் செய்திகள், இந்தியச் செய்திகள் ஆகியவற்ரோடு பெருமளவிற்கு விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒரு தமிழ்க் கவிதையும் இதில் இடம்பெறுகின்றது. வாசித்துப் பாருங்கள்.
சுவாரசியமானத் தகவல்களாக டர்பனில் இயங்கி வந்த பாரதி மாதா ட்ராமா கம்பெனி பற்றிய தகவல்கள் ஜவர்கர்லால் நேருவின் மொழிகள், அறிவே கடவுள் என்ற தலைப்பிலான கட்டுரை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.
அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சாரிகள் விளம்பரம், இசைக் கருவிகள் விளம்பரம், உயிரைக் காப்பாற்றக் கூடிய பான விளம்ப்ரம் போன்றவை சுவையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த முழு சஞ்சிகையை தமிழ் இங்கே காணலாம். 
முதல் பக்கம் மாத்திரம் தெளிவாகப் பதியப்படவில்லை. ஏனைய பக்கங்களை பிடிஎப் கோப்பில் ஸூம் செய்து வாசிக்கலாம்.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 

You may also like

Leave a Comment