Home பல்வேறு மலேசியத்தமிழர்களின் சரிதம்_களப்பணி (சுபா + கண்ணன் 2013)

மலேசியத்தமிழர்களின் சரிதம்_களப்பணி (சுபா + கண்ணன் 2013)

by admin
0 comment
நேற்று மலாயா பல்கலைக் கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பட்டறை  ஒன்று நடைபெற்றது. மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நிகழ்த்திய பட்டறை இது.

தமிழ்த்துறையில் இளங்களை, முதுகலை  முனைவர், பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த பட்டறையில் கலந்து கொண்டனர்.

மலாயா பல்கலைக் கழக தமிழ்த்துறையின் தலைவர் இணைப்பேராசிரியர். டாக்டர் கிருஷ்ணன் அவர்களின் வரவேற்புடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

த.ம.அ தலைவர் பேராசிரியர் டாக்டர். நா. கண்ணன் அவர்களின் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய அறிமுகமும், மின்னாக்கம் பற்றிய விழிப்புணர்வும் என்ற ஒரு உரை தொடக்கமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து எனது நூல் அச்சுக்கலை வளர்ச்சி என்ற ஒரு சொற்பொழிவு நடைபெற்றது.

இறுதியில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த டாக்டர். சபாபதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

தமிழ்த்துறையின் ஆசிரியர்கள் டாக்டர். குமரன், மோகனதாஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் உடன் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் மலாயா பல்கலைக் கழக தமிழ்த்துறை இணைந்து எவ்வகையான திட்டங்களில் செயல்படலாம் என்ற வகையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சில படங்கள்..

பங்கு கொண்ட மாணவர்களில் சிலர்…
முதல் வரிசையில் இணைப்பேராசிரியர் டாக்டர்.குமரன், இணைப்பேராசிரியர் டாக்டர்.கிருஷ்ணன் (துறைத்தலைவர்)
த.ம.அ தலைவர் பேராசிரியர். டாக்டர். நா.கண்ணன்.
நன்றியுரை வழங்கும் டாக்டர்.சபாபதி (மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறை + மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க துணைத்தலைவர்)
எனது உரையின் போது..
மலாயா பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆசிரியர்களுடன்  தமிழ் மரபு அறக்கட்டளையினர்.
இடமிருந்து வலமாக.. டாக்டர். மோகனதாஸ், இணைப்பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் (தலைவர்), வஸந்தா (என் உறவினர்), முனைவர்.க. சுபாஷிணி, பேராசிரியர்.டாகடர்.நா.கண்ணன், டாக்டர்.சபாபதி, இணைப்பேராசிரியர் டாக்டர் குமரன்.

அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment