வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் தமிழ் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: தண்டலையார் சதகம்
படிக்காசு தம்பிரான் அருளிய பழமொழி விளக்கம் குறிப்புரையுடன்
வெளியீடு: தருமையாதீனம்
நூலைப் பற்றி..
இது ஒரு அறவுரை நூல். இதன் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் ஒவ்வொரு பழமொழியை அமைத்து அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூலுக்கு பழமொழி விளக்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
செய்யுள் நடையென்றாலும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் இயல்பான விசயங்களைப் பொருளாக்கி அமைத்திருக்கின்றார் தம்பிரான்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 425
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: மறைந்த டாக்டர்.கி.லோகநாதன், மலேசியா.
மின்னாக்கம்:சுபாஷிணி
மின்னூலாக்கம்: திரு.சுந்தர் கிருஷ்ணன்
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comment
நன்றி, சுபாஷிணி,
'நாளொரு பக்கத்துக்கு' ஒரு அருமையான மூலஊல் கிடைத்தது.