வணக்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று நூறாண்டுகளுக்கு முந்தையதான ஒரு வார இதழின் மூன்றாண்டு தொகுப்பு மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல்: ஒரு பைசாத்தமிழன்
வார இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர்
நூல் குறிப்பு:
19ம் திகதி ஜூன் மாதம் 1907 முதல் 3ம் திகதி மார்ச் 1909 வரை வாராவாரம் புதன்கிழமைகளில் வெளிவந்த ஒரு பைசாத்தமிழன் வார இதழின் மின்னாக்கப் பதிவின் முதல் பகுதி இது. இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழக செய்திகளை இதில் காணமுடிகின்றது என்பதோடு பர்மா, மலேசிய, இங்கிலாந்து தொடர்பான செய்திகளையும் இந்த வார இதழில் காணமுடிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய செய்திகள் இன்றைய வரலாற்றுச் செய்திகள் என்பதை வலியுறுத்தும் வகையில் நமது சேகரத்தில் இணையும் ஒரு பெருமை மிகு மின்னாக்கமாகவே இதனைக் கருதுகின்றேன். இந்த நூலை வாசித்து ஆய்வு செய்வது இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை சரியாக அறிந்து கொள்ள மிக நன்கு உதவும் என்பதில் அய்யமில்லை. ஏறக்குறைய 480 பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழ் தொகுப்பு இது.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 437
இந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: பாரி செழியன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: பாரி செழியன், அயோத்தி தாசர் ஆய்வு நடுவம், மதுரை
மதுரை அயோத்தி தாசர் ஆய்வு நடுவகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!
நூலை வாசிக்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
3 comments
நூலை பெறுவதில் மிகவும் தாமதம் ஆகிறது. இது பற்றி முன்னரே அறிவேன் என்பதல், இதன் அளவிலா மதிப்பை அறிவேன். அருமையான பணி. பாரி செழியன் அவர்களுக்கும், சுபாஷிணிக்க்கும் நன்றி.
இன்னம்பூரான்
அருமை.
நன்றி.
அருமை.
நன்றி.