Home Video மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவைக்கூத்து

மண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவைக்கூத்து

by admin
0 comment
தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள்.  75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள்.
கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இருந்த கலை இது. இன்றோ தமிழகத்தில் மிக அருகிப்போன ஒரு கலையாக உள்ளது. இந்தப் பேட்டியில்,
  • தோல்பாவை கலையை நிகழ்த்தும் கணிகர் எனும் சமூகத்தினர்- இவர்களுக்குள் உள்ள 12 பிரிவுகள், அவர்களது பணிகள்
  • வால்மீகி, கம்பன் ஆகியோர் வழங்கிய ராமாயணத்திற்கு மாறுபட்ட வாய்மொழியாகப் பேசப்பட்ட ராமாயணக் கதைகளை வழி வழியாக தோல்பாவை வழி வழங்கும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள்
  • தோல்பாவைக்கூத்து மராட்டியர் கலை அல்ல, தமிழர் கலைதான்
  • நவீன கதைகள் தோல்பாவை கூத்தில்
  • தோல்பாவை கலைஞர்கள்
  • தோல்பாவை கலைக்கு பிரபலமான ஊர்கள்
  • தோல்பாவை கூத்துக் கலைஞர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள்
என விரிவான தகவல்களை வழங்குகின்றார்.
akp5.jpg
யூடியூபில் காண:   https://youtu.be/7RWy9M70B2g
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment