Home Video மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3

மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3

by admin
1 comment
நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத்  தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.
அந்த நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் தமது ஆய்வு ரீதியான கருத்துக்களைப் பதிகின்றனர்:
-முனைவர்.கோ.பழனி, இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
-முனைவர்.ஜா.அமைதி அரசு, தமிழ்த்துறை, எல்.ஆர்.ஜி. அரசினர் மகலிர் கல்லூரி, திருப்பூர்
-முனைவர்.இரா.சீனிவாசன், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
-முனைவர்.மு,செல்லன், பேராசிரியர் (ஓய்வு), கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரி
-நாட்டுப் பாடல்கள் விளக்கம், முனைவர்.க.வெங்கடேசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு
மற்றும் கலந்து கொள்ள வந்திருந்தோரது கருத்துக்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.
தமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும்,   பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை  ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.
நம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி  இந்த 1 மணி நேர பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.
விழியப் பதிவு: அசோக் (சென்னை, தமிழகம்)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

1 comment

edward packiaraj April 19, 2020 - 2:25 am

தாலாட்டு, நையாண்டி, நழுங்கு, திருமண வாழ்த்துப்பாடல், ஒப்பாரி , கும்மி போன்ற சுமார் 300 பாடல்களை பதிவு செய்துள்ளேன்

Reply

Leave a Reply to edward packiaraj Cancel Reply