மண்ணின் குரல்: ஜூலை 2019 -சாளுவன்குப்பம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால முருகன் கோயில்
சாளுவன்குப்பம் அகழ்வாய்வுப்பணி தமிழகத்தின் முக்கிய அகழ்வாய்வுப் பணிகளில் ஒன்று. தமிழகத்திலேயே முதல் முதலில் முழு சங்ககால முருகன் கோயில் இங்கு தான் அகழ்வாய்வில் கிடைத்தது.
இந்தப் பதிவில்
- சாளுவன் குப்பத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்ட வரலாறு
- முருகன் – மக்கள் தலைவன்
- கல்லினால் செய்யப்பட்ட வேல்
- சுடுமண் உருவங்கள்
- வைதீகம் உள்வாங்கிய முருகன்
- வைதீகத்தின் தாக்கத்தால் புராணக்கதைகள் முருகனுக்கு தெய்வயானையை இணைத்த செய்தி
இப்படி பல தகவல்களோடு வருகின்றது இப்பதிவு.
இப்பேட்டியை நமக்காக வழங்கிய தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த டாக்டர்.ராஜவேலு அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
விழியப் பதிவு: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.தேமொழி (THFi கலிஃபோர்னியா)
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
கருத்துரைகள்: