Home Video மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்

மண்ணின் குரல் காணொளி: பிப்ரவரி – 2020: அரிட்டாபட்டி கல்வெட்டுகள்

by admin
0 comment

**THF Heritage Video Release Announcement**
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு  – பிப்ரவரி – 2020

வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் மரபுக்காணொளி வெளியீடு.
மதுரை அரிட்டாபட்டியின் தமிழி கல்வெட்டும் வட்டெழுத்து கல்வெட்டுகளும் மதுரையில் வாழ்ந்த சமண சமயத்தவரைக் குறிக்கும் கல்வெட்டுகளாகும். 
தமிழி  கல்வெட்டின் மூலம் ‘நெல்வேலி சழிவன் அதினன் ஒளியன்’ என்பவர் இச்சமண பள்ளியை உருவாக்கிய செய்தியையும் அறிய முடிகிறது. 
குகைத்தளத்தின் வெளிப்புறம் முக்குடைக்குக் கீழே புடைப்புச் சிற்பமாக அர்த்தபரியாங்காசனத்தில் முக்குடையின் அமர்ந்துள்ள  மகாவீர தீர்த்தங்கரரின் உருவத்தையும் காண முடிகிறது. இதனை கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் அச்சணந்தி என்ற முனிவர் செய்வித்துள்ளார். 
திருப்பிணையன் மலையிலிருந்த பொற்கோட்டுக் கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ளதை அதனடியில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது என்ற செய்தி குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க: 

titlecard.jpg

https://youtu.be/GwDs_hVHYM8

மதுரை அரிட்டாபட்டி சமணக் கல்வெட்டுகள் குறித்து விளக்கம் தருகிறார் பேராசிரியர் முனைவர் கோ. சசிகலா
அன்புடன்முனைவர். தேமொழி [செயலாளர் – தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment