வருகின்ற வெள்ளிக்கிழமை 4.12.2020 அன்று ஜெர்மனியில் திருவள்ளுவரின் ஐம்பொன் சிலைகளை நிறுவிய முதலாம் ஆண்டு விழா மற்றும் ஐரோப்பியத் தமிழர் நாள் விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி இணையம் வழி இந்திய/இலங்கை நேரம் மாலை 8 மணிக்கு நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியைச் சிறப்பிக்கின்றார் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் துணையதிபர் மாண்புமிகு வையாபுரி பரமசிவம் பிள்ளை.
ஐரோப்பியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் முதல் பகுதி ஆங்கிலத்திலும் அடுத்த பகுதி தமிழிலும் என 2 பாகங்களாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி வருகின்றது. அனைவரும் பங்கேற்று சிறப்பு சேர்க்கத் தயாராகுங்கள்.
https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/
– விழா ஏற்பாட்டுக் குழுவினர்