18.12.2020 இரவு 8 மணிக்கு “எம்.ஜி.ஆர்” சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் இரா கண்ணன் அவர்கள் வழங்கும் சிறப்புரை எட்டு மணிக்கு நிகழ உள்ளது. டாக்டர் இரா கண்ணன் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் மூத்த அரசியல் ஆலோசகராக பணிபுரிபவர். தற்சமயம் சூடான் நாட்டில் பணியில் இருக்கிறார். அவர் எழுதிய MGR – A Life என்ற நூல் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எம்ஜிஆர் அவர்களது வாழ்க்கை பயணத்தை ஆய்வுக் கோணத்தில் வெளிப்படுத்தும் ஒரு நூல்.