வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. இதுவரை நான்கு மின்னிதழ்களை வெளியீடு செய்துள்ளோம். இன்று ஐந்தாவது மின்னிதழ் வெளியீடு காண்கின்றது.
காலாண்டு இதழாக வெளிவரும் இந்த மின்னிதழில் ஒவ்வொரு காலாண்டிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சிலதேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இந்தக் காலாண்டின் வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது தமிழ் வளம் என்பதாகும்.
மின்னிதழை வாசிக்க இங்கே செல்க!
அட்டைப்படக்குறிப்பு: தமிழ் மரபு அறக்கட்டளை திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த வகையில் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் ஆய்வுகளில் ஈடுபடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
2 comments
Tamil is alive because of you..I appreciate your work…Dr.c.subburaman
Tamil is alive because of you..I appreciate your work…Dr.c.subburaman