Home Events மூன்ஷன் தமிழ் மன்றத்தின் தமிழ் நூல்கள் பற்றிய கருத்தரங்கம்

மூன்ஷன் தமிழ் மன்றத்தின் தமிழ் நூல்கள் பற்றிய கருத்தரங்கம்

by admin
0 comment

ஜெர்மனி மூன்ஷன் தமிழ்ச் சங்கத் தமிழ் மன்றம் ஏற்பாட்டில் அக்டோபர் 15, 2023 அன்று தமிழ் நூல்கள் பற்றிய கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்களும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. ஜெர்மனியில் மூன்ஷன் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து பயன்பெற்றார்கள்.

எனது உரையில் தமிழ் நூல்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியத்தையும் தமிழ்நாட்டிற்கும் ஜெர்மனிக்கும் உள்ள உறவுகளைப் பற்றிப் பரவலான தகவல் பொதுமக்களிடையே அறிந்து கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினேன்.இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த பதிப்பாளர் தோழர் ஒளிவண்ணன் தலைமை தாங்கினார். பதிப்பாளர் இவள் பாரதி கருத்துரை வழங்கினார்.

முனைவர் க. சுபாஷிணி

You may also like