இவரை தமிழ் மரபு அரக்கட்டளைக்காக நான் வீடியோ பதிவு ஒன்றினை செய்திருக்கின்றேன். இந்தப் பேட்டியில் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் ம.இ.க வரலாறு, அமைச்சரவையில் தாம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், மேம்பாடுகள், தனது இளமைக் கால அனுபவம், மலேசியாவில் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் நிலை, தமிழர்களுக்கென்று தனது முயற்சியில் உருவாக்கியுள்ள ஒரு பல்கலைக்கழகம் என்ற பல தகவல்களை வழங்குகின்றார்.
இந்தப் பேட்டியை இன்று வெளியிட அவகாசம் இல்லை. இன்று இரண்டு படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கின்றேன்.
77 வயது நிரம்பிய டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் தற்சமயம் ம.இ.க தலைமைப் பதவிலிருந்து விலகி விட்டாலும் பிரதமரின் அமைச்சரகத்தில் அமைச்சராக தொடர்ந்து தனது சேவையை ஆற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன் தற்சமயம் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கான சிறப்பு தூதர் என்ற பதவியையும் வகித்து வருகின்றார்.
அவருடன் பேசிக் கொண்டிருந்த 2 மணி நேரத்தில் மலேசிய மண்ணின் மனம் முழுமையாக அங்கு நிரம்பியிருந்தது. என்னையும் கண்ணணையும் தே தாரிக் (இது மலேசியாவிற்கே உரிய ஒரு வகை டீ) வழங்கி வரவேற்றார். தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் தனது ஆசிகளை வழங்கினார்.
படங்கள்…
சுபா