THF Announcement – E-books update: *இணையமும் அஞ்சலும்
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் … முனைவர் பெ.சந்திரபோஸ் அவர்களின் “இணையமும் அஞ்சலும்” மின்னூல் இணைகின்றது.
நூல் குறிப்பு:இணையமும் அஞ்சலும் ஆசிரியர்: முனைவர் பெ.சந்திரபோஸ்மின்னூல் பதிப்பு: முதல் பதிப்பு, 2000 வெளியீடு: சிங்கப்பூர் தமிழ் இணையம் 2000 மாநாடு
கால்நூற்றாண்டிற்கு முன் சராசரி மக்கள் வாழ்வில் ஊடுருவிய கணினிப் பயன்பாட்டின் துவக்கம் தமிழின் வளர்ச்சியிலும் தாக்கம் ஏற்படுத்தியது. அந்த ஆரம்பக்கால கணினித் தமிழ் வளர்ச்சியின் ஒரு பகுதியை ஆவணப்படுத்தியுள்ளது முனைவர் பெ.சந்திரபோஸ் அவர்களின் “இணையமும் அஞ்சலும்” என்ற தமிழ் இணையப் பயன்பாடு குறித்த எளிமையாக இந்த நூல்.
சிங்கப்பூர் தமிழ் இணையம் 2000 மாநாட்டின் போது குறுவட்டில் எண்ணிம வடிவில் இந்நூல் வெளியிடப்பட்டது. தமிழ்க் கணினி மரபின் ஒரு எடுத்துக் காட்டாக உள்ள இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தின் மின்னூல்கள் வரிசையில் இணைக்கப்படுகிறது.
தொடக்க காலத்தில் தமிழ்ச் சமுதாயம் கணினிப் பயன்பாட்டினை எப்படிஅணுகியது, எப்படி எல்லாம் தமிழ் மக்களுக்குக் கணினி மற்றும் இணையப் பயன்பாடு எடுத்துச் சொல்லப்பட்டது என அறிந்து கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயனுள்ள வகையில் அமைகிறது.
தனது நூலைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்திற்கு வழங்கிய முனைவர் பெ.சந்திரபோஸ் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றிகள் உரித்தாகிறது.
நூல் ஆசிரியர்: முனைவர் பெ.சந்திரபோஸ்நூல் உருவாக்க உதவி: முனைவர் பெ.சந்திரபோஸ் மற்றும் திரு முத்து நெடுமாறன்
நூலை வாசிக்க – தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூலகத்தில் இங்கே செல்க:http://www.tamilheritage.org/old/text/ebook/THF_InaiyamumAnjalum-ChandraBose.pdf
நன்றி.
அன்புடன்தேமொழி தமிழ் மரபு அறக்கட்டளை [www.tamilheritage.org]